நாளை மற்றும் நாளை மறுதினங்களில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பான அறிவிப்பை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளை (5) சனிக்கிழமை P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு,
காலை 8.30 முதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும்,
மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
அவ்வாறே நாளைய தினம் E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு சுழற்சி முறையில்
காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலங்களும்,
மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் ஞாயிற்று கிழமையன்று A, B, C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாத்திரம் சுழற்சி முறையில்
காலை 9 மணிமுதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது.