Wednesday 8th of May 2024 12:05:08 AM GMT

LANGUAGE - TAMIL
.
சனி, ஞாயிறு தினங்களில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

சனி, ஞாயிறு தினங்களில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!


நாளை மற்றும் நாளை மறுதினங்களில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான அறிவிப்பை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாளை (5) சனிக்கிழமை P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு,

காலை 8.30 முதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும்,

மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அவ்வாறே நாளைய தினம் E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு சுழற்சி முறையில்

காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலங்களும்,

மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை மறுதினம் ஞாயிற்று கிழமையன்று A, B, C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாத்திரம் சுழற்சி முறையில்

காலை 9 மணிமுதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE